Tuesday 29 June 2010

கண்ணீர் காதல்


காதல் என்பதும், காமம் என்பதும் மனிதனின் இயற்கை குணங்கள். அது அவர்களின் உணர்ச்சியின் உரிமைகளே!

ஆனால் நமது கலாச்சரமும் அதிலிருந்து.. நன்மைகளை நெறிப்படுத்துவதன் நோக்கத்துடன்.. காதலுக்கும் காமத்துக்கும் சில நெறிமுறைகளை கொண்டது நமது கலாச்சாரம்.

நமது கலாச்சரம் அழிவதனை எதிர்கொள்பவர்களில் நானும் ஒருவன்.
ஒவ்வொருவரின் வாழ்கையிலும் அவர்களின் குடும்பங்களிலும் பலவித பிரச்சனைகளும் துன்பங்களும் பிரிவுகளும் தோல்விகளும் அவமாணங்களும் உருவாக காரணம்..  பிடிவாதங்களினாலும், விட்டுக்கொடுக்கும் உணர்வுகள் இல்லாமையுமே.

கண்டவுடன் காதலித்த காலம் அது அப்போ! ஆனால் காணமலே காதலிக்கும் காலம் இது இப்போ!  நல்ல இதயங்கள் காணாமல் காதலித்து கண்டுகொள்ளும் தருணம் கல்யாணத்தில் முடிவதுதான் இப்போது நமது இளைய சந்ததியினரின் புதிய பாதையாக உருவாகியுள்ளது..

இதனால் ஏமாற்றங்களும் அதிகமாகின்றன.  குடும்பத்தின் வரவு முதல் செலவு வரை, தனது ஆசைகளை மறந்து கணவனும் மனைவியும் பெண்பிள்ளைகளுக்காக ஓடி உழைத்து அவர்களை வளர்க்கின்றனர்.
ஆனால் பெற்றோரின் எதிர்கால ஆசைகளில் இவர்கள் கண்ணீரை பரிசளிக்கின்றனர். காரணம் என்ன? காதல் காமத்தை தாண்டுவதே!

பெற்றோருக்கும் விட்டுகொடுக்க மணமில்லை... காதலர்களுக்கும் காவியம்பாடும் காலங்களில் கவிதைகளாக வேண்டும்...
எனவே கண்கள் கசங்குகிறது... யாருக்கு? பெற்றோருக்கு...

(ந.ரசிகரன்)