Saturday 5 June 2010

"வரையப்படாத ஓவியங்கள்"

 
   அழகான தனது தொட்டிலில் உறங்கிய இரண்டு சிட்டுக்குருவிகள்.. காலை வணக்கங்களை அழகான,  ஆசைகளுடன் அசைந்தாடிக்கொண்டு, பறிமாற்றி பறந்து சென்றன,

 அந்த பக்கத்து வீட்டு சேவல் செவ்வாணம் சிவக்கக் கண்டு இந்த வீட்டு கோழியை ’சீக்கிரமா! வா வா’ என அழைத்தது.  கடற்கரை காற்று சிலிர்க்க கடல் அலை காலைத்தென்றல் பாட, காவியா எனக்கு ”குட்மோர்னிங்” சொன்னாள். நானும் ’வணக்கம்’ என்றேன்.


காவியா- என் நன்பணின் தங்கை. நான் ரசிக்கும் கடற்கரையின் அந்திவாணம்..

நானும் நந்துவும்(காவியாவின் அண்ணன்) மாமரத்தடியில் இருந்த தண்ணீர் பைப்பில் குளித்துவிட்டு,  'வாழையிலை கேட்ட நந்து அம்மாவுக்கு  அவங்க தோட்டத்தில் வழையிலையும் வெட்டிக்கொடுத்தேன்.

  வீட்டுக்கு வந்த நந்துவின் மாமா.. 'சாப்டிங்களா' என்றார்.   காவியாவின் அப்பா ‘இரவில் நன்றாக உறங்கினியா?’ என என்னிடம் கண்ணோடு கண் பார்த்து கேட்டார்.  காலை வீட்டுக்கு வந்த அவங்க ஊர் தர்மகர்த்தா.. எனது தலையை தடவி ’உன் அம்மா,அப்பா  நலமாக இருக்காங்களா? என அன்பாக விசாரித்தார்.

நந்து வீட்டுக்கு வந்த எல்லோரும் என்னைப்பார்த்து என் கண்களைப்பார்த்து, சுகம் கேட்டார்கள்.அவங்க வீட்டுக்கு சாப்பிட அழைத்தார்கள். நீண்ட நேரம் என் சிறு வயசு குரும்புகளைக் கேட்டார்கள்.
 மாம்பழம் வெட்டி தந்தார்கள். வெயில் நேரங்களில் செவ்இளநீர்(செவ்விளணீர்) சீவித்தந்தார்கள்.  இதைப்போல் நிறைய நிறைய...

இன்னொரு காலைப்பொழுது...




அந்த இந்து சமுத்திர கரையோரத்தில் உள்ள கடற்கரை மண்ணில் இருந்து,  கிளம்ப விருப்பம் இன்றி சென்னையில் இருக்கும் என் வீட்டுக்கு கிளம்பினேன்.  இந்த ரயில் நிலையத்தில் அவசர அவசரமான காலை வணக்கங்கள் பறிமாறப்படுகின்றன. தடுமாற்றமான பயணங்கள் ஒவ்வொரு கண்களிலும்.  அவசர கைத்தொலைபேசிகள் அவசர அவசரமாக ரிங் ரிங்.. ’லூசு லூசு.’. ’போன் அடிக்குது அட போன எடு..எடு’ என்று பல பல ரிங் டியூன் என் காதை கிழித்தன. நானும் நந்துவும் வீட்டுக்கு வந்து சேருவதற்கே மணி பத்து.

காத்திருந்தாள்.கேமளா’ எங்கள் வீட்டு மொட்டமாடியில்..
(தொடரும்)