Saturday 12 June 2010

துளி..துளியாய் காதல்




நிலவை பார்த்து வளர்ந்தவளே!

இன்று உனக்கென்ன கோபம் அந்த நிலவின் மீது...

வாணவில்லுக்கு வர்ணம் கொடுத்தவளே!

வா!  வைகறை பொழுதில் பெளர்ணமி காணலாம்...

மழையில் விளையாடி மழலை மொழி பேசியவளே!

மயக்கம் கொண்டேன்..  நீ  சூடிய மல்லிகையில்...

இன்று மல்லிகை நனைகிறது.. நீ சிந்தும் மழைத்துளியால்...

அன்பே!  தாகம் கொண்டேன்.. வந்து தண்ணீர் கொடு...