Wednesday 7 July 2010

வந்து பாருங்க

நயந்தாரா நமது கண்களுக்கு... புதிய உலகம் நமது சிந்தனைக்கு... க்ளிக் செய்யுங்க The Technology News ok
Technology News

`ஸ்ரீ சுவாமி நாராயணன்`

இங்கிலாந்தில் இந்து சமயமும் அதன் கலாச்சாரமும் என்னும் கூர்மையான நோக்கத்துடனும்,  ஜரோப்பாவில் முதலில் வடிவமைத்த அழகானதும் அற்புதமானதுமான இந்து கோவில் இதுவென சொல்லலாம்.

லண்டனில் வடமேற்கு பகுதியான வெம்லியில்’(wembly)   வெள்ளைநிற மார்பிள் கோவில் என்று கேட்டாலே! அது Neasden `ஸ்ரீ சுவாமி நாரயணன் மந்திர்` ஆலயமே.  அமைதியான சுற்றுச்சூழலும் இக்கோயிலின் முக்கிய சிறப்பாகும்.

இந்து கலாச்சாரம் மீது ஆர்வம் கொண்ட இந்துக்கள் மட்டுமன்றி இங்கிலாந்து பிரதமர் முதல் உலக தலைவர்களும் அடிக்கடி வந்துபோகும் பெருமையும் இந்த கோவில் நிர்வாகத்துக்கும் பெருமை. இங்கு வந்து போகும் பிரபல்யங்களின் புகப்படங்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.  கோவிலின் விழா, சர்வதேச  மகளீர்தினம், EXHIBITION, BLOOD DONATION  ஆகிய நிகழ்வுகளுக்கு இங்கிலாந்து பிரபல்யங்கள் கொளரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டு வரவேற்கப்படுகிறார்கள்.  `அப்துல் கலாம், `டோனிஃப்லயர், டேவிட் கெமரூன், கோர்டன் ஃப்ரவுன் மற்றும் மறைந்த இளவரசி `டயானாவும் ப்ரின்ஸ் சார்லஸும் இக்கோவிலுக்கு வருகைதந்துள்ளனர்.   



1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களில் இக்கோவில் உருவாக்கப்பட்டது. 2820டன்கள் எடைகொண்ட பல்கேரியன் சுண்ணம்பு கற்களும் 2000டன்கள் எடைகொண்ட இத்தாலியன் மார்பிளும் இந்தியாவுக்கு எடுத்துச்சென்று 1500 சிற்பிகளின் திறமையான கைவடிவத்தில் 26300 சிற்பச்சிலைகளை வடிவமைத்து,  லண்டனுக்கு கப்பலில் கொண்டுவரப்பட்டு 3000 கட்டடகலை கலைஞர்களின் கைவண்ணத்தில் ஆகஸ்ட்மாதம் 1995 ’ஸ்ரீ சுவாமி நாரயணன் மந்திர் ஆலயம்’ அழகான வெள்ளைமாளிகை வடிவத்தில் கம்பீரமாக அமையப்பெற்றது.

இக்கோயிலின் உச்சியைப் பார்த்தாலே வானத்தில் இருக்கும் உணர்வு ஒவ்வொரு மனதையும் நிறைத்துவிடும். இக்கோவிலுக்கு வருபவர்களுக்கென வாகணம் நிறுத்தும் வசதிகளும் இருக்கிறது.  பாதுகாப்பு சோதனையின் பின்புதான் உள்ளே நுளைய முடியும். கேமராவினை உள்ளே எடுத்துச்செல்ல முடியாது.  கோயிலின் வெளிச்சூழலில் மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும். இக்கோவிலுக்கு வெளியில் எவ்வேளையிலும் நான்கு காவளாலாளிகளும் இருப்பார்கள்.

சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்றுவரை இந்துசமயம் வளர்ந்த விதத்தை ஓவியங்கள், சிற்பங்கள், பொம்மைகள் மூலமாக ஆங்கிலத்தில் கதைத்தொடர்களாக வெளிப்படுதியிருக்கிறார்கள். இதையொட்டி இராமாயனம், மகாபாரதம், சிராவணன் கதை, ரந்திதேவன் கதையும் உருவமைத்து வைக்கப்பட்டுள்ளன.  இவைகளைப் பார்த்து படித்து கோவிலின் உற்புறத்தை சுற்றி வரவே நேரங்கள் அமைதியை தழுவி கோவிலும் அமைதியாக இருக்கும்.



 வட இந்திய செல்வந்தர்களின் வாரிசுகள் மட்டுமே இந்த பாடசாலையில் படிக்கிறார்கள். ஏனெனில் ADMISSION வாங்கவே இங்கு போட்டி போடுகிறார்கள். 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பாடச்சாலையே முதலாக உருப்பெற்றிருக்கிறது. கடந்த எட்டு வருடங்களாக இப்பாடசாலைதான் லீக் டேபிலில் முதல் இடம்.  வெஸ்டன் ஸ்டைலில் உருவான இந்து பாடசாலை என்ற பெருமையும் உண்டு. இதை உருவாக்கியவர் `பிரமுக் சுவாமி மகராஜ்`

`ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலுக்குப் போங்க என்னைவிட அதிகமாக தெறிஞ்சிக்குவீங்க....
நன்றி
















Thursday 1 July 2010

நான்! நீ!

             

நான் பார்த்த..  வளர்பிறை நீ!
நீ வரைந்த..      பெளர்ணமி நான்!

நான் வரைந்த..   சித்திரம் நீ!
நீ பார்த்த..              பனிக்கட்டி நான்!

நான்  ரசிக்கும்..  வானவில் நீ!
நீ சுவைக்கும்..   சாத்துக்குடி நான்!

நான் சுவைக்கும்..  சர்க்கரை நீ!
நீ ரசிக்கும்..                ராட்சசன் நான்!

நான் கானும்..  கனவுகள் நீ!
நீ தேடும்..           மாங்கனி நான்!

நான் தேடும்..   வைகரை நீ!
நீ கானும்..          கடற்கரை நான்!

நான் பேசும்..  மெளனங்கள் நீ!
நீ கொஞ்சும்..   மழைத்துளி நான்!

நான் கொஞ்சும்..  குழந்தை நீ!
நீ பேசும்..      மழலைமொழி நான்!