Sunday 6 June 2010

அவளுக்காக..


நான் இவள் மீது கொண்ட காதலை மறந்தேன்...
இன்று இவளின் கன்னம் முதன்முதலாய் சிவக்கக்கண்டு!

காதல் கொண்டேன் இவளின் பெண்மையின் பொறுமை கண்டு..
தலைகுனிந்தாள்..  தனது தாய்மையின் ஆரம்பம் கண்டு!

செவ்விதழ்கள் சிரிக்க கன்னங்கள் மிளிர்க்க..
மயக்கம் கொண்டாள் என் பார்வை கண்டு!

காதல் கொண்ட இதயங்கள் கைகோர்த்தன..
காதலாகி காவியம் பாடிய இதங்களின் ஆசீ கொண்டு!

கண்கள் பனித்தன அவளின் ஆசை முத்தம் கண்டு..
 தலை நிமிர்ந்தாள் தன் மெளனத்தில் புன்னகை கொண்டு!.